California இல் பசுக்களிற்கு நடக்கும் கொடுமைகள்

Share
அனேகமான நாடுகளில் மிருக வதை சட்டம் உள்ளது. இருந்தாலும் அது சீரானதாக இல்லை.சில நாடுகளில் மிருகங்களை குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக வண்டிகளில் ஏற்றி சென்றால் மட்டுமே அபராதமோ அல்லது கம்பி எண்ண வேண்டிய நிலை.ஆனால் வியாபார நோக்கங்களிற்காக பண்ணைகளில் வைத்து   பராமரிக்க படும் மிருகங்களிற்கு நடக்கும் கொடுமைகளை எவரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை.

சில சமயங்களில் பசுவை [Cow] தெய்வமாக வணங்குகின்றார்கள்.ஆனால் பல நாடுகளில் இலாபத்தை மட்டுமே இலக்காக கொண்டு செய்படுவதால் இவை பல இன்னல்களிற்கு உள்ளாகிறது.California இல் உள்ள பசுக்கள் இவற்றில் முதல் இடத்தை பெற்று கொள்கிறது.இங்குள்ள பசுக்களின் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான். முறையான பராமரிப்பு இன்மையால் ஒவ்வொரு காலநிலை மாற்றத்திற்கும் அதிகமானவை இறந்துவிடுகிறது.

குறிப்பாக வெள்ளம் ஏற்படுகின்ற காலங்களில் 1-5 அடிகள் வரை நிலத்தினுள் புதைந்து விடுகிறது.கன்று குட்டியாக [heifers] இருக்கும் வரை தான் இவைக்கு நிம்மதி.குறிப்பிட்ட ஒரு பருவத்தை அடைந்த பின்னர் இவை மிருக வைத்தியரின் கட்டுப் பாட்டிற்குள் வந்து விடுகிறது.இவை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் pregnant ஆக்கப்படுகிறது.இதுதான் இங்கு பெரிய வியாபாரமாக உள்ளது. பணம் தான் இலக்காக இருப்பதால் இவற்றுக்கு உயிர் உத்தரவாதம் இல்லை.

பண்ணை பராமரிப்பாளர்கள் தனது கையை முழுவதுமாக பசுவின் பின் பக்கமாக செலுத்தி கன்று குட்டி ஆரோக்கியமாக உள்ளதையும் மற்றைய தொழிற்பாடுகள் சரியாக நடக்கிறதா என பார்க்கிறார்கள்.பசு குட்டி போடுகிற பருவம் வந்தவுடன் எல்லாம் வழமையானதாக இருந்தால் தானாகவே குட்டி போட்டுவிடும்.இல்லை என்றால் பண்ணை பராமரிப்பாளர்கள் சிறிய Pipe ஒன்றை செலுத்தி கன்று குட்டியின் அமைவகளை சரிசெய்துவிடுகிறார்கள்.

கன்று குட்டியை பின்னர் வெளியே இழுத்து எடுக்கிறார்கள்.வருவதில் சிக்கல்கள் இருந்தால் அதிக பலத்தை பிரயோகிக்கிறார்கள்.கன்று குட்டி வெளியே வந்தபின்னர் தான் பண்ணையாளர்களிற்கு நிம்மதி. பண்ணையாளர்களை விட பசு மாட்டிற்கு தான் நிம்மதி. இத்தனைக்கும் பசு தனக்கு பின்னே என்ன நடந்தது என்பதை அறியாது உள்ளது.பசு தனது கன்று குட்டியுடன் கொஞ்சி மகிழ்வதால் பண்ணை ஊழியர் தப்பி விடுகிறார். சிறிது காலத்தால் கன்று குட்டிக்கும் இதே நிலை தான்.

 
இதுக்கெல்லாம் காரணம் Schwarzenegger Arnold . பாலை குடிச்சு எப்படி உடம்பை வைச்சிருக்கிறானப்பா.

 
photos-Discovery

1 comments:

Barari said...

namathu mathirppirkuriya veera thuravi IRAMAGOPALAN avarkalukku theriviththaal udan america sendru obamavai ulukki eduththu viduvaar.

Post a Comment

Related Posts with Thumbnails