19 வயதுடைய அப்கானிஸ்தான் பெண் ஆயிசா வின் மூக்கு அறுபட்ட நிலையில் உள்ள முகத்தின் படம் Time Magazine இன் அட்டைபக்கத்திலும் அவரின் இந்த நிலைமைக்கு காரணமான சம்பவம் அச்சஞ்சிகையிலும் வெளியான போது முழு உலகமே அதிர்ச்சி அடைந்தது. இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் இடம் பெற்றது.
இதன் பின்னணி சம்பவத்தை பார்ப்போமானால் ஆயிசா 12 வயதாக இருந்த போது அவரின் தந்தை ஒரு தலிபான் போராளிக்கு செலுத்த வேண்டியிருந்த கடன் தொகைக்கு பதிலாக ஆயிசாவை அப்போராளிக்கு மணம் முடித்து வைப்பதாக உறுதி அளித்தார். அதன்படி ஆயிசாவும் அப்போராளியின் குடும்பத்திடம் கையளிக்கப்பட்டார். அங்கே தான் அவரின் சோக கதை ஆரம்பமாகியது. மிக மோசமான முறையில் பாலியல் துன்புறத்தல்களுக்கு ஆளானார்ர். கடினமான வேலைகள் இரவு பகலாக செய்ய பணிக்கப்பட்டார். அத்துடன் வீட்டு விலங்குகள் தங்கும் இடத்திலேயே தங்க வைக்கப்பட்டார்.
இந்த கொடுமைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் தப்ப முற்பட்ட ஆயிசா அவரது கணவனால் ( போராளி) பிடிக்கப்பட்டார். தண்டிக்கும் முறையில் அவரது காதுகளையும் மூக்கையும் வெட்டி எறிந்தான் கணவன். ஆயிசா அது பற்றி CNN இக்கு கூறும் போது அந்த நிமிடம் இறந்து விட்டது போல உணர்தேன். நள்ளிரவு போல நினைவு திரும்பிய போது உடம்பு முழுது குளிர்ந்த நீரால் குளிப்பாட்டியது போல இருந்த்தது. அவ்விடம் முழுவதுமே இரத்த வெள்ளமாக இருத்தது.
அந்த ஆப்கான் மலைப்பகுத்தில் குற்றியுராக விடப்பட்ட ஆயிசா அவரின் தந்தையின் அப்பா வீட்டிலிருந்து அமரிக்க ராணுவ வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டார். ஆப்கானில் முகாமுக்கு முகாமாக மாற்றப்பட்டு கொண்டிரிந்த ஆயிசா இறுதியாக ஆவணி மாதம் "Grossman Burn Foundation" என்ற நிறுவனம் மூலம் அமரிக்காவுக்கு கொண்டு செல்லப் பட்டு ஒரு அமரிக்க குடும்பத்துடன் தங்க வைக்கபட்டார். இந்த மாதம் West Hills Hospital என்ற வைத்தியசாலையில் Dr Peter H என்ற வைத்தியரால் ஆயிசாவுக்கு மூக்கில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது .
இதற்கான வைத்திய செலவை ஏற்றுக்கொண்ட "Grossman Burn Foundation" அமைப்பு கூறுகையில் ஆயிசாவுக்கு நிரந்த்தர்மான ஒரு தீர்வை வழங்க எண்ணி உள்ளதாக. இதற்காக அவரின் உடலின் ஏனைய பகுதிகளில் உள்ள எலும்பு, தசை என்பவற்றை எடுத்து அவரின் காதுகள், மூக்கு என்பவற்றை சீர் செயயபட்டு அவரின் பழைய தோற்றத்தை கொண்டுவர ஏற்பாடாகியுள்ளது. புறத்தோற்ற காயங்களை குணப்படுத்த முடியும். ஆனால் அவரின் மனதின் ரணங்களை அல்லாவால் மட்டுமே குணப்படுத்த முடியும் .....
ஒரு இன விடுதலைக்காக வந்த ரட்சகர்கள் , கலாச்சார காவலர்கள் என்று சொல்லி சொந்த இன மக்களையே கொடுமைபடுத்துபவர்கள் எந்த இனத்துக்காக போராடுகிறார்களோ அந்த இனத்தாலேயே வெறுக்கப் பட்டு எந்த நாடுகளால் உருவாக்கப்பட்டார்களோ அந்த நாடுகளாலேயே பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு இல்லா தொளிககப்படுவது வரலாறு . பாவம் அப்பாவி ஜனங்கள் தான் . இறைவன் தான் எல்லோரையும் ரட்சிக்க வேண்ட்டும்...
9 comments:
மனம் கனக்க வைக்கிறது!
கேட்கவே கொடுமையாக இருக்கிறது.....
நல்ல பதிவு, உங்களின் கவலையை விளித்ததும் சிறப்பு. ஆனால் பத்திரிக்கைகளிலும் மற்ற மீடீயாக்களிலும் முஸ்லிம்கள் தொடர்பாக முக்கியமாய் ஆஃப்கானிஸ்தான், ஈராக் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருப்பவர்களைப் பற்றி வருபவை 10% கூட உண்மையில்லாதவை என்பதே உண்மை. இதனை புரிவதற்கு பவர் ஆஃப் நைட்மேர் என்னும் ஒரு காணொளியை காணலாம். போர் தொடுக்கவும் அதனை மெயின்டயின் பண்ணவும் தொகுக்கும் கதைகளில் ஒன்று. இந்த சம்பவம் உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் அச்சில் வார்த்துள்ள மொத்த கதையும் உண்மையாய் இராது. போராளிகளின் குடும்பத்தில் அவ்வளவு டார்ச்சர் இருக்கும் எனில் பிபிசியின் போர் கள நிருபர் சகோ. யுவான் ரிட்லீ எப்படி அந்த கடத்தலுக்கு பின் முழு மூச்சாய் இஸ்லாத்தை தழுவியிருப்பார்? இன்று வரை காஜாக்காகவும், மற்ற இடங்களில் உயிரை கையில் பிடித்து வாழும் முஸ்லிம்களுக்காகவும் அவருடன் தோள் கொடுத்து நின்று போராட வெகு சில ஆண்களே. சமீபத்தில் கூட 8 அமெரிக்க பட வீரர்களை கைது செய்தனர். காரணம் என்ன, அவர்களின் டென்ட்டில் சின்னஞ்சிறு சிறுமிகளை பலாத்காரம் செய்து அந்த பிண உடலையும் புணர்ந்து அவர்களின் மண்டையோடுகளை தங்களின் படுக்கையின் கீழ் வைத்திருந்ததால்...ஆதரத்துடன் கைது. ஆயினும் அவர்களைப் பற்றி அவ்வளவாக மீடியா கவலைப்படாதது ஏன்? அவர்களின் வழக்கையும் கவனிக்காதது ஏன், இது போன்ற பல சம்பவங்களை சொல்லலாம். தங்களையோ, தங்கள் பதிவினையோ குற்றம் சொல்லவில்லை. உண்மையை மட்டுமே எடுத்துரைக்கிறேன். நன்றி. :)
இந்த முஸ்லீம் தீவிரவாதிகள் ஏன் இப்படி மனநிலை தவறியவர்களை போல் செய்கிறார்கள் ? அல்லா இவர்களை படைக்காமல் இருந்திருந்தால் என்ன ?
CNN போன்ற மீடியாக்கள் எல்லாம் பணத்துக்காக எதையும் செய்ய கூடியவர்கள் . இவர்கள் அமெரிக்கா, ஏனைய பண முதலைகளின் கைக்கூலிகள். ஏழைகளின் கண்ணீர் தான் இவர்களின் அதிகார, பண மூலம். எனவே இவர்களிடம் இருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது.
தீவிரவாதம் ஒன்றை திரை மறைவில் உருவாக்குவதும், கட்டி எழுப்புவதும் பின் அதை அழிப்பது போல் நாடகமாடுவதும் இந்த பணக்கார, அதிகார வர்க்க மனிதர்களும் நாடுகளுமே. அப்பாவி மக்கள் இவர்களின் தாளத்துக்கு ஆட வேண்டியவர்கள் மட்டுமே... என்ன செய்ய... எல்லாம் இறைவன் செயல்
அன்னுவின் கருதோடு நானும் உடன்படுகிறேன்..
CNN அமெரிக்காவின் அடிவருடி.. அமெரிக்க ரானுவம் செய்யும் அடாவடித்தனங்களை எல்லாம் அவர்களுக்கு தெரியாது போலும்..
நன்றிகள்
எஸ்.கே
ம.தி.சுதா
அன்னு
Riyas
அன்னு,Riyas உங்களின் கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன்.
"என்னதான் நாங்கள் நவீனப்பட்டு விட்டதாக காட்டிக்கொண்டாலும்... உலகின் ஒவ்வொரு பாகத்து மக்களின் அடி மனங்களில்... (பொதுவாக) இனம்,இடம் எனும் வெறி... இருக்கின்றது. இன்றும்.. அந்த இன இட வெறிதான் இன்றும்... தீவிரவாதமெனும் பெயரிலும்... அதை தடுக்கிறோம் என்ற பெயரிலும்... உலகத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறது."
copied from
http://valaakam.blogspot.com/2010/10/01.html#comments
Post a Comment